தாய்மை - கவிதை

தாய்மை
****பெண்ணுக்குப் பேரழகு
கொடுப்பது தாய்மையே.....
பார்புகழ் போற்றிடும்
உத்தமியும் அவள்தானே.....உலகமே பிறந்தது
மானிடப் பிறவிக்காய்
உயிர் சுமப்பவள் அவள்தானே...அன்பின் சிகரமாய்
கருணையின் கடலாய்
குடும்பத்தின் குழவிளக்காய்
திகழ்பவளும் அவள்தானே.....உலகாலும் தலைவர்கள்
உயிர்காக்கும் நாயகர்கள்
உருவாக்கிட வழிகாட்டும்
ஆசானும் அவள்தானே....துன்பங்கள் துயரங்கள்
எதுவந்த போதிலும்
தாங்கி நிற்கும்
தாரகையும் அவள்தானே....நன்றி:- நதீரா வசூக்
<