தாய்மை - கவிதை
கவிதை போட்டி… போட்டியாளர் இல :- 005
தாய்மை
அம்மா என்கிற
அழைப்பும்
தாய்மை என்கிற
தத்துவமும்
பெண்ணிற்கே
உரிய கிரீடம்
பூக்களின்
மறுபதிப்பாய்
பெண்ணின்
அழகு
பெண்ணால் இல்லம்
கோயிலாகிறது
அன்பு
விறுத்தியாகிறது
ஒரு வீடு
பெண்ணிருந்தால்
மட்டுமே வெளிச்சமென
கருதப்படுகிறது
அது மனதிற்கும்
சேர்ந்து வெளிச்சம்
கொடுக்கிறது
தன்னிலை
விளக்கமளிக்கும்
அவளது
தன்னடக்கம்
என்பது
அவளது பிறப்பால்
வந்தது
அமைதியாகவே
இருந்து
சிதறிக்கிடக்கும்
இதயங்களை
ஒவ்வொன்றாய்
எடுத்து கோர்க்கும்
சாதுரியம் மிக்கவள்
பலவித
வலிகளிலும்
எந்தவித
இன்பங்களிலும்
சமமாய் நுகர்ந்து
முகத்திற்கும் தெரியாது
அகத்துடன் போட்டு
மூடிக்கொண்டு
வாழ பழகிக்கொண்டவள்
அவளுக்கு
மட்டுமே
தெரியும்
குடும்பத்தின்
தொடக்க
நிலையும்... எல்லையும்
எனவேதாம்
அவள்
குலவிளக்காய்
போற்றப்படுகிறாள்.!
நன்றி :- ச. தேவநாயகி
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>