காதல்- கவிதை

காதல்- கவிதை

காதல்
**********

காதலின் சுடரொளியே
  கற்கண்டுச் சுவையமுதே
தித்திக்கும் தேன்சுவையே
  தெவிட்டாத மொழியழகே

மதுரச மாதங்கியே
  மனதிற்குள் நிறைந்தவளே
விழியாலே காதல்செய்யும்
  விண்ணக வெண்ணிலவே

காதோரம் கதைபேசி
  களவாடினாயே உள்ளத்தை
தேடிய நிமிடங்கள்
  தென்றலாய் வந்தாயே

மூடிய விழிகளுக்குள்
  மூன்றாம் பிறையானாய்
மூச்சுக்குள் கலந்துநீயும்
  முழுநிலவாய்த் திகழ்கிறாய்

மொய்க்கும் வண்டினங்கள்
  மௌனராகம் பாடிடவே
எனக்குள் வந்தாயே
  ஏழிசை கானமாகி

கடலோடு முத்தமிட்டு
  அலையவள் தவழ்வதுபோல்
மெல்லிடை மேனியிலே
மிதந்திடும் என்மனமே

துள்ளிவரும் உன்னழகில்
  தூண்டிலது பாய்கிறதே
என்விழி வீச்சினிலே
எட்டியே தொட்டிடுவேன்

பட்டுமேனிக் கதகதப்பு
  பரவசம் பொங்கிடவே
தொட்டணைக்க நீயும்
  தொடுவானம் ஆனாயே

நன்றி:- தயாளனி சிவநாதன்

Also Read:

முதல் காதல்... - கவிதை அன்புத் தோழியே! !! கவிதை முதலும் நீ... முடிவும் நீ - கவிதை நினைப்பதில்லை என்று வருந்தாதே "காதல்" - கவிதை தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் ....... வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக.... உதயம் கண்டேன் - கவிதை கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் - வாழ்க்கை மாற்றங்கள் அழகானவை, அம்மா என்கிற அழைப்பும் இமை கண் யுத்தம் உன்னை கண்ட நாள் முதல்

Also Read:

வலி வலியது கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் புதுப்பிறப்பாக்கும் காதல்! நட்பு வரமாகுது! - கவிதை தூரவிழிப் பார்வைக்குள் துறவின் குரல் - கவிதை வாழ்க்கை எமக்குக் கிடைத்த வரமே கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்