என்னவளில் நான் கொண்ட காதல் பார்வை - கவிதை
கவிதை போட்டி இல :- 049

என்னவளில் நான் கொண்ட காதல் பார்வை ❤
அன்று ஒரு நாள் சந்திரன் வெடுக்கென்று மறைந்தான்
பகலவன் கை விரித்து எட்டி பார்க்கும் தருணம்...உன்னை சுற்றி உலகம் உறங்கிக்கொண்றிருக்க
அங்கு அவள் மட்டும் விழித்தாள் ...கருத்த மேகம் கலைந்து போனது
உறங்கிய உடையோடு அப்போது அவள் மட்டும் வாசல் கதவை திறந்தால் என் இதயவறையும் திறந்து கொண்டது ...வாரி அள்ளி எடுத்து முடிந்த கூந்தல் அவளின் இடை தட்டியது ..
பொய்யழகு என்று எதுவுமில்லை அவள் காலடி படும் தருணம் என் வாசலும் வெட்கி தலை கவில்க்கும்
அச்சடித்த ஆணி போல் அசையாமல் நான் அவளை பார்த்த அந்த நொடி..பளீர் என்று சிரித்தாளோ என்னவோ..
சூரியன் சற்று ஒளிந்து கொண்டான் புகை மண்டலத்தில் ..கோலம் போட அவள் விரல் மட்டும் கைய விட்டு வெளியே வர விரல் விட்டு எண்ணி விடுகிறேன்.. ஒவ்வொரு புள்ளிக்கும் அவள் உதடுகள் படும் பாட்டை..
மூடி கொள்வது எதுவாக இருந்தாலும் இந்த உலகில் அவள் அழகை சூழ்ந்துகொள்வது என் இதயமாக மட்டும் இருக்கட்டும்..
நன்றி :- சபி சத்யா
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
also read :-
முதலும் நீ... முடிவும் நீ - கவிதை
நினைப்பதில்லை என்று வருந்தாதே "காதல்" - கவிதை
தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......
வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....
கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான் - வாழ்க்கை
மாற்றங்கள் அழகானவை,
அம்மா என்கிற அழைப்பும்
கடைசிக் காதலும்............ கரையும் நேரமும்
வாழ்க்கை எமக்குக் கிடைத்த வரமே
கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்