என் உயிரே - கவிதை

கவிதை போட்டி இல :- 052

Apr 7, 2023 - 19:37
 0  270
என் உயிரே -  கவிதை

என் உயிரே
******

என் உயிரே !
சோகங்களை மட்டும் 
எனக்கு 
சொந்தமாக்கிவிடாதே

உன் உறவின் சங்கமம்
என் வாழ்வின் வாசலில்
ஒரு விடிவெள்ளியாய்!

என் சகல சந்தோஷங்களிலும்
உன் நினைவின் உரசல்
நீங்காது நிலைத்திருக்கும்

நான் உறங்கியிருந்தாலும்
உன் நினைவுகளில் 
விழித்திருப்பேன் 

சிரித்திருந்தாலும் 
உன்னையே  
சிந்தித்திருப்பேன் 

உன்னுடன் கழித்த 
சந்தோஷ நிமிஷங்களை 
சுகமான சுமையாய் 
நெஞ்சிலே சுமந்திருப்பேன் 

கற்பனையில் 
சிறகு விரித்து 
ஒருசோடி வானம்பாடியாய் 
உல்லாச வானில் 
சிறகடிப்பேன் 

சொப்பனங்களில் கூட 
உன் நிழலையே 
நிஜமாய் நான் 
நினைத்திருப்பேன் 

கற்பனை ஓராயிரம் 
காதல் மனதிலே சுமந்து 
காலடிச் சுவடிகளில் கூட 
பத்திரப்படுத்துவேன் 

எனவே ஏமாற்றிவிடாதே 
ஏமாற்றினால்.. 
கலைந்து விடும்
இவள்  கனவுகள் 
உன்னால்....
உன்னுடன்....
உனக்காக....

அதனால் 
சோகங்களை மட்டும்  
எனக்குச் 
சொந்தமாக்கிவிடாதே 

கற்பனையும் ஆக்கமும்: 

நன்றி :- மயில்வாகனம் சந்ராணி

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்