தாய்மை - கவிதை

கவிதை போட்டி இல :- 041

Apr 6, 2023 - 20:49
Apr 7, 2023 - 10:30
 0  93
தாய்மை - கவிதை

"பத்து மாதமாய் சுமந்து 
பக்குவமாய் கரையிறக்கி 
பக்கத்தில் வைத்து பாலூட்டி 
பத்திரமாய் பார்க்கும் -தாய்மை 
பத்து மாதம் மட்டுமல்ல 
பன்னிரு வருடமானாலும் 
பாரம் என்று நினையாமல் 
பத்திரமாய் வளர்த்தெடுக்கும் -தாய்மை 
பகைமையாகும் உறவென்று உணராமல் 
பாசத்தை அள்ளி தெளித்து 
பண்புடன் வளர்த்து 
பள்ளி அனுப்பி பல்கலைக்கழகமும் அனுப்பி 
பட்டம் பெற செய்யும் -தாய்மை 
பட்டம் பெற்ற பின்பு 
பட்டத்துயானையென மாறி தூக்கியெறிந்தாலும் 
பம்பரமாய் சுற்றி தன்னை காப்பான் 
என்று என்னும் -தாய்மை 
பணிவான தாய்மை இதுவே எனது தாய்மை"

நன்றி:- க. ரேவதி

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

Whats Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow