கரைகாணாத்தாய்மை! - கவிதை
கவிதை போட்டி இல :- 055
கரைகாணாத்தாய்மை!
உடன்வாழும் தெய்வந்தான் தாயென்பதிங்கு
உயிர்வார்த்த உயிரல்லோ உலகிற்கேயின்று
கடன்தீர்க்க முடியாத அன்பொன்றுதானே
கரைத்திங்கு எனையூட்டும்
கரைகாணாத்தாய்மை!
விளக்காக தன்விழிகள் சுடராக்குமவளே
விடியல்கள் வரைகின்றாள் எனக்காகவென்று
அளக்காத பாசங்கள் பரிமாறித்தேற்றி
அருள்வாளே வரங்கள்தான் நான்வாழவென்று!
கருவாக்கி உயிராக்கி உடலாக்கியென்னை
கருத்தோடு கண்மூடாக் காப்பாற்றுமன்னை
வருந்தாது வசந்தங்கள் நான்காணவென்னு
வடிப்பாளே எனையின்று தானுருகிநின்று!
தன்னலங்கள் துளியேதும் துளிர்க்காததெய்வம்
தரைமீது நான்வாழ தனையுடைக்கும்பாசம்
வன்மங்கள் இல்லாத வண்ணமவள்நெஞ்சம்
வாழ்வொன்றை எனில்க்கண்ட தாய்மையுடையுள்ளம்!
நன்றி:- கவிஞர். சூரியநிலா...
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>