மீண்டும் வாரா வாழ்க்கை! - கவிதை

கவிதை போட்டி இல :- 054

Apr 7, 2023 - 20:20
 0  72
மீண்டும் வாரா வாழ்க்கை! - கவிதை

மீண்டும் வாரா வாழ்க்கை!

ஒருமுறை வாய்க்கும் வாழ்க்கை
ஔிமயம் ஆக்கிடு வாய்ப்பை
கருவதாய் வளரும் வாழ்வு
கனிவதாய் ஆக்கிநீ வாழு!

பரிசாய் கிடைத்த வாழ்வு
பக்குவமாய் அதைநீ ஆளு
தரிசாய் ஆக்கி விடாதே
தருணம் மீண்டும் வராதே!

அயலான் மீது அன்பை
அலையாய் நீயும் தந்தால்
பயனாய் உன்னில் படரும்
பசுமை வாழ்வின் கோலம்!

நீதி நேர்மை அன்பு
நிலைக்க நீயும் நெம்பு
தேதி தோறும் உன்னை
தேடிச் சேரும் நன்மை!

மீண்டும் வாரா வாழ்க்கை
மிடுக்காய் வாழ்ந்து தீரு
தாண்டும் நாட்கள் எல்லாம்
தரமாய் வாழ்வைப் பேணு!

நன்றி:- கவிஞர். சூரியநிலா...

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்