மனிதா நீ மனிதனாயிரு - கவிதை

கவிதை போட்டி இல :- 068

Apr 8, 2023 - 20:37
 0  80
மனிதா நீ மனிதனாயிரு - கவிதை

மனிதா நீ மனிதனாயிரு

உலகம் உள்ளங்கைக்குள் உருட்டி விளையாடுகிறான்
ஓட்டப்பந்தயத்தில் ஓடுகின்றன ஜீவராசிகள்
நிமிடங்களில் இடியப்பசிக்கல்கள் உருவாகின்றன எங்கோ
சிலர் மனங்கள் நெருப்பாறுகளை நீந்திக்கடக்கின்றன
சாலையோர பூக்கள் அரை வயிறு நிரப்ப கையேந்திநிற்கின்றன
மாளிகைகளும் தகரக்குடில்களும் உண்மைக்கு உயிர்கொடுக்கின்றன
பிறப்பும்இறப்பும் ஏற்றமும் வீழ்ச்சியும் வாழ்க்கைச்சக்கரத்தில் நிகழ்கின்றன
மனிதநேயம் மண்ணுக்குள் மடிந்திட அநீதி முளைத்தெழுகின்றது
கைப்பேசி மகானையும் மனிதவிலங்குகளையும் உற்பத்திசெய்கின்றது
நூலிளையில் உயிர் பிழைக்கின்றனர் சிலர்
நூல்போல் உடலமைப்பிலும் மாந்தர் மண்ணிலுளர்
மண்புழு போல் தோழனாயும் நரி போல் தந்திரக்காரணாயும்
காகம் போல் பகுத்துண்பவனும் சிங்கம் போல் வேட்டையாடுபவனும்
எம்மோடுதான் சுவடுவைத்து பயணிக்கிறார்கள்
அனுபவம் புதுமையென்றாலும் ஆண்டாண்டுகளாய்
கற்றுக்கொடுக்கிறது கல்லறை மனிதா நீ மனிதனாயிரு 

நன்றி:- சோபிகரன் மேரிசீனு

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்