தாய்மை - கவிதை

கவிதை போட்டி இல :- 048

Apr 7, 2023 - 07:54
Apr 7, 2023 - 11:01
 0  227
தாய்மை - கவிதை

தாய்மை                            

"கருவாகி உருவாகி ஆல விருட்சமாய் வளர்ந்தோங்கி
எம் இதய தெய்வமாகி கண் இமையாகி,
அரிதான அன்பாகி,
யாம் வாழ வழி சமைத்தீர்களே தாயே!  
ஆயிரம் போர்ப்படைத்துன்பம் வந்தாலும்
மழலையின் முகம் பார்த்து இன்புறுபவலே தாய்!
பத்துத்திங்கள் வயிற்றில் சுமந்து
தன் ஆயுள் காலம் முழுவதும்
பிள்ளையை நெஞ்சில் சுமப்பவள் தாய்!  
தாய்மைக்கு ஈடு வேறேதுமில்லை!  
தாய் இருக்கும்போதே தாய்மையை போற்றாத
பேதை உள்ளம் இப்போது
விழிஓரம் கண்ணீர் சிந்த ஏங்குகிறது...!
(தாய்ப்பாசத்திற்காக)"
நன்றி :- பே.ரக்ஷாயினி

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1