இயற்கையின் அழகு.... கவிதை

கவிதை போட்டி இல :- 067

Apr 8, 2023 - 20:20
 0  122
இயற்கையின் அழகு....  கவிதை

இயற்கையின் அழகு....

 தன்னிலை  தனை  மறந்து
இரசிக்க  வைக்கும்  ஓவியமாய்
பஞ்ச பூதங்களை  அடக்கி  ஆளும்  
சிம்மாசனத்தின்  அழகிய  ராணியாவள்

சூரிய  சந்திர  ஒளியில்
பாதி  காலம்  விடியலாய்
மீதி  நேரம்  இருளாய்
சுற்றும்  பூமிக்கு   சாட்சியாவள்

வார்த்தை  இல்லாத  வர்ணமாகி
அன்பை  பொழிந்திடும்  அன்னை
சினம்  கொண்டால்  இவள்  
சீறிப் பாய்ந்து  சிதைத்திடுவாள்

வளமான  மண்ணை  காக்க  
வளர்ந்து  நிற்கிறாள்  மரமாய்
வரட்சியின்   தாகம்  தீர்க்க
நீர் பொழியும்  மழையாகிடுவாள்

நானிலத்தில்  விளையும் தானியம்
பசித்தவன்  வயிற்றை  ஆற்றுமே
திக்கற்று வாழ்விடம்  இல்லாதவனுக்கு
தன்னையே  உறைவிடம்    ஆக்கிடுவாள்


உயிர்  பிறப்பும்  இறப்பும்
இவள்  உள்ளே   சங்கமமாகி
சிந்திய  வியர்வை   செங்குருதியை
மானுடரின்  விதை  நிலமாக்குவாள்  

நல்லெண்ண  அரவணைப்பில்  குழந்தையானால்
தாயுள்ளம்  கொண்டு   காப்பாள்
அழிக்கும்  தீயயெண்ண  மிருகமானால்
பாடம்  புகட்டும் ஆசானாவள்

பசுமை  தந்த  தோழி
என்றும்  நல்வாழ்வு  தந்திடுவாள்
ஆஹா  எத்தனை  உண்மை
இயற்கையின்  அழகே   தனித்தன்மை!!!

                      நன்றி:- V.Sayanthini

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்