தொலைத்தூர காதல் - கவிதை

கவிதை போட்டி இல :- 051

Apr 7, 2023 - 19:31
Apr 7, 2023 - 19:32
 0  147
தொலைத்தூர காதல் - கவிதை

தொலைத்தூர காதல்
    - - - - - - - - - - - - - - - - -
    தொலை தூரம் நீ  இருப்பதினால்....
     உன்னை தேடி    வெகுதூரம்
    பயணிக்கிறது என்
            இதயம்...

      நீ என் அருகில்   
இல்லை என்பதினால்
        உன் அழகிய 
  நினைவுகள் மட்டுமே
        என் வாழ்க்கை...

       தனிமையை நேசிக்கிறேன் உன்
   நினைவுகளால்...
இரவினை அதிகம்
     விரும்புகிறேன்
                 நீ
கனவில் வருவதால்...

     தொலைவில் இருக்கும் நாட்கள்
  தொலைந்திடும்
        நொடிகள்...
காதலின் புதுமையை
    புரிந்திடவே என
        உணர்ந்து 
கொள்ளுகிறேன்...

    உன்னை காண   
         வேண்டும்
      என்பதற்காக
     தினந்தோறும்       
    துடிக்கிறது என்
           இதயம்...
          காணும்    இடமெல்லாம் உன்
           முகம்...
   கேட்கும் திசை
  எல்லாம் உனது
            குரல்...
          
   நீ என் அருகில்
     இல்லாததால்
   கண்ணாடியாக      
        நொறுங்கி
    செல்கிறது என்
           இதயம்...
உன் நினைவுகளால்
     நெகிழ்ந்து தான்
         செல்கிறேன்
             தினமும்...

    துடியாய் துடிக்கும்
         இதயத்தோடு
       காத்திருப்பேன்
            உனக்காக...
   தூங்கா விழிகளால்
        தொட்டு விட்டு   
          போகும் உன்
      நினைவுகளுடன்...

நன்றி :- Kobishan Riththika.

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 


மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்