தாய்மை  - கவிதை

கவிதை போட்டி இல :- 061

Apr 7, 2023 - 21:31
 0  49
தாய்மை  - கவிதை

தாய்மை 


இருளறையில் உருக்கொண்டு
மாதவம் கடந்து மடி தவழ்ந்து 
தத்தித் தாவி நடை பயின்று
ஏடு எடுத்து கவி நயன்று
தம்பிக்கு தாயாகி
சக மாணவனுக்குத் தோழி ஆகி 
பருவகால மாற்றம் எய்தி
புரியா விந்தைகளில் மூழ்கி 
பல கலையும் கற்றறிந்தாள்

மாயங்களில் சிகுண்டு
மதிமயங்கித் தொலையாமல்
பெற்றவர் மனம் குளிர
மாண்புடனே நடந்திடுவாள்

யாரென்று அறியாதவனே
யாவும் என்று மாறிப்போக
கலக்கங்கள் ஏதும் இன்றி
கடமை வழி நடந்திடுவாள்

பெற்ற மனம் பரிதவிக்க
மாற்றாரும் விலகி நிக்க
ஒற்றை ஒளி விளக்காய்
கணவன் வீட்டினிலே ஒளிர்ந்திடுவாள்

அன்பிலே பண்பு கலந்து
காதலில் தனை மறந்து
அவன் நலம் காக்க தன்னலம் துறப்பாள்
அவள் பிறக்க அன்னை பெற்ற வேதனைகள்
அவள் அறியத் தவம் கிடப்பாள்..

அவனோ அவளோ
தன் உயிர் என்பாள்
உயிர் கொடுக்கத் தன் உடல் சிதைப்பாள்
உருக்கொடுக்க உதிரம் இறைப்பாள்
மாதவம் புரிந்து நிறை மதி ஆவாள்..

பிறப்பிக்கும் நொடிக்காய் தன் இறப்பின் எல்லையினையும் கடக்க முயல்வாள்
பெண் என்றே பிறந்து
அவள் அடையா இன்பம் அனைத்தும்
அம்மா என்று நீ அழைக்க
தாய்மை அது பரிசளிக்கும்

பெண்களின் வாழ்நாள் தவம் தாய்மை..

நன்றி:-சு. கிருஷிகா

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்