அம்மா - கவிதை

கவிதை போட்டி இல :- 059

Apr 7, 2023 - 21:14
 0  85
அம்மா  - கவிதை

அம்மா

ஆயிரம் ஆயிரம் வரிகளை எழுதிய
என் மொழிகள்
தாயேனும் உணர்வுக்கு என்
வரி கொடுக்கவில்லை
காகிதம் தண்ணிலே ஏறி மேய்ந்த
என் பேனாக்கள்
பூமகள் அவளுக்கு ஏன்
உயிர் கொடுக்கவில்லை

ஒரு முறை கோவமாய்
முறைத்து பார்த்தலே
அம்மாடி அவள் நெஞ்சு நொறுங்கி விடும்
என்னை ஒரு மனிதனாக உலகில்
உரு எடுக்க வைத்தவளுக்கு நான் என்ன கைமாறு செய்ய கூடிடும்

கால்வயிறு கஞ்சி குடிச்சு
என் வயிற நிறைய வைச்சவ
தன் வயிற பட்டினி போட்டு
என் வயிற குளிர வைச்சவ

நான் நடக்க பாதையெல்லாம்
கல்லு முள்ளு தவத்தி வைச்சவ
கால் கடுக்க என்ன தூக்கி சுமந்து போய்
பள்ளி சேர்த்தவ

சின்ன வயசுல என் கண்ணீர பாத்தா
துடிதுடிச்சு போய்டுவா
இப்ப அவ கல்லறை முன்னால என் கண்ணீர பாத்தா எழுந்திடுவாளோ என்னமோ....

நன்றி:- பாஸ்கரன் அனுஜன்

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. 

மேலும் கவிதைகள் வாசிக்க  -> Click Me

இந்த போட்டி பற்றி அறிய ->>

கவிதைப்போட்டி - 1

also read :-

முதல் காதல்... - கவிதை 

அன்புத் தோழியே! !! கவிதை

முதலும் நீ... முடிவும் நீ - கவிதை

நினைப்பதில்லை   என்று வருந்தாதே  "காதல்" - கவிதை

தாய்மை "கர்ப்ப காலத்தில் தாயின் வயிற்றில் .......

வண்ண வண்ண நிலவுகளாக வாசம் கொண்ட மலர்களாக....

உதயம் கண்டேன் - கவிதை 

கலப்படம் இல்லாத மன மகிழ்ச்சி தான்  - வாழ்க்கை

மாற்றங்கள் அழகானவை,

அம்மா  என்கிற அழைப்பும்

இமை கண் யுத்தம் 

உன்னை கண்ட நாள் முதல்  

வலி வலியது

கடைசிக் காதலும்............ கரையும் நேரமும் 

புதுப்பிறப்பாக்கும் காதல்!

நட்பு வரமாகுது! - கவிதை 

தூரவிழிப் பார்வைக்குள்  

துறவின் குரல் - கவிதை

வாழ்க்கை எமக்குக் கிடைத்த  வரமே

கருவாகி உருவாகி ஆல விருட்சமாய்