தாய்மை - கவிதை
கவிதை போட்டி இல :- 037

தாய்மை
இவ்வுலகம் வெறுத்ததால்
மீண்டும் அவள் வயிற்றினுள் போக ஒரு வழி
கண்டேன்...
யாரிடமும் கூறாமல்
மீண்டும் அவள் கருவறை வாசம் வேண்டி
வாழ்கை பயணத்தை முடித்துக்கொண்டேன்...என் பிரேதம் மேல் அனைவரும் மண்
எறிகையில்
முகத்தில் வீசாதீர்கள் மூச்சுத்திணரும் என
அழுத அன்னையின் அருகில் நின்று
நானும் அழுது கொண்டிருந்தேன்...அவசரப்பட்டு விட்டேனே என்று...
நன்றி:- Valiyodi_s
உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
மேலும் கவிதைகள் வாசிக்க -> Click Me
இந்த போட்டி பற்றி அறிய ->>
கவிதைப்போட்டி - 1
Whats Your Reaction?






