Tamil Eezha Kaatrea | Naatpadu Theral 04 | Vairamuthu | IsaiArasan | Sathyaprakash | Jeeva Mugunthan

இந்த நூற்றாண்டின் மறக்க முடியாத மனிதத் துயரம் ஈழத்தில் நடந்த இனப்படுகொலை. உடலோ வெளிநாட்டில்; உயிரோ தாய்நாட்டில். புலம்பெயர் மக்களின் புலம்பல் இப்பாடல்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் நாட்படு தேறல் 100 பாடல்கள் திட்டம். 100 இசையமைப்பாளர்கள் – 100 பாடகர்கள் – 100 இயக்குநர்கள். வெவ்வேறு உள்ளடக்கங்களில் உலகத்தின் எல்லாப் பொருள் குறித்தும் பாடப்படும் பாடல்கள்.

Srilankan Team Direction : Abayan Ganesh

Assistant Director : Janakan Sivagnanam

DOP : Kavil ads , Sulaxsan mahenthirarasa , Rajinthan varatharasa

Artist : Rajeepan Harshanan (as Son) , Ithayaraj mariyathas (as Father) , Rajeepan Tharmini (asMother) , Kayal Baskaran (as Teacher)

Production : IBC TAMIL

தமிழ் ஈழக் காற்றே!

தமிழ் ஈழக் காற்றே!

விண்ணின் வழிவந்து வீசு – எங்கள்

மண்ணின் சுகம்கண்டு பேசு

* உயிரைக் கொடுத்த

அன்னை கயிறாய்க் கிடப்பாளோ?

எலும்பைக் கொடுத்த தந்தை

நரம்பாய்க் கிடப்பாரோ?

நல்லூர் முருகன் கோயில்மணியில்

நல்லசேதி வருமோ?

உள்ளூர் வாழும் ஊமை ஜனங்கள்

உயிரும் உடலும் நலமோ?

ஓடிய வீதிகள் சுகமா – எங்கள்

ஒருதலைக் காதலி சுகமா?

பாடிய பள்ளிகள் சுகமா? – உடன்

படித்த அணில்கள் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ – எங்கள்

உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ

* முல்லைத் தீவின் கதறல்

மூச்சில் வலிக்கிறதே!

நந்திக் கடலின் ஓலம்

நரம்பை அறுக்கிறதே!

பிள்ளைக் கறிகள்

சமைத்து முடித்த தீயும் மிச்சம் உள்ளதோ?

எங்கள் ஊரை எரித்து மீந்த

சாம்பல் சாட்சி உள்ளதோ?

வன்னிக் காடுகள் சுகமா?

– எங்கள் வல்வெட்டித்துறையும் சுகமா?

காய்ந்த கண்ணீர் சுகமா? – இன்னும்

காயாத குருதியும் சுகமா?

ஒருமுறை வந்து சொல்லிப்போ –

எங்கள் உயிரைக் கொஞ்சம் அள்ளிப்போ