செவ்வானம் நானே நீ அவந்திகையே -இறுதி பகுதி (தொடர்கதை)
காதல் தொடர்கதை

அதிமா... வேந்தன் கத்தி கொண்டே ஓடவும் அவந்திகா கீழே விழுகவும் சரியாய் இருந்தது.
அவன் இருந்த மனநிலையில் அவளை காப்பதே தலையாய கடமையாய் நினைத்தான் அவளை சுட்டவனை பிடிப்பது இப்போது முக்கியமில்லை என எண்ணியவன் அவளை தூக்கிக்கொண்டு லிஃப்ட் அருகில் செல்ல அதுவோ நேரம் பார்த்து வேலை நிறுத்தம் செய்து கொண்டிருந்தது.
ஷிட்...காலால் எட்டி உதைத்தவன் சிரமத்தை பாராது ஐந்தாவது மாடியில் இருந்து அவளை தூக்கிக்கொண்டு ஓடினான்.
ஹேய் அதி கண்ணை திறந்து பாருடி..கண்ணை மூடாத எதாவது பேசு அதி அதி என அசைவற்று கிடந்தவளிடம் பேச்சு கொடுத்து கொண்டே வேந்தன் ஓடிவர அவளிடமிருந்து சிறு அசைவு கூட இல்லை.
ஃபேக்றியில் உள்ளவர்கள் எல்லாம் என்னவோ ஏதோவென்று பதறி ஓடிவர.யாரும் வரதிங்க எல்லாரும் வேலைய பாருங்க என தடுத்த வேந்தன் கார் பார்க்கிங்கிற்கு வந்திருந்தான்.
செக்யூரிட்டி... வேந்தன் கத்தியழைக்க நிலமை உணர்ந்து வந்த செக்யூரிட்டி காரை எடுத்தான்.
அவந்திகாவுடன் போனில் பேசிக்கொண்டிருந்த ஜனனிக்கும் துப்பாக்கி சத்தமும் வேந்தனின் கதறலும் நன்றாகவே கேட்டு விட விஷயம் புரியாமல் கலங்கி போன அவளும் அவந்திக்காவிற்கும் வேந்தனுக்கும் அழைப்பு விடுத்தே நொந்து போனாள்.
அவந்திகாவின் போன் சம்பவ இடத்திலேயே கிடக்க வேந்தனின் போனோ அவனது ஆஃபிஸ் அறையில் இருந்தது பின் எங்கிருந்து போனை எடுக்க முடியும்.
கொஞ்சம் பாஸ்ட்டா போ என செக்யூரிட்டியை அவசர படுத்தியவன் தண்ணீர் தெளித்தும் அவளை எழுப்ப முயன்று கொண்டிருந்தான்.எப்பொழுதும் டாமை வம்பிலுக்கும் ஜெர்ரி போல அந்த வேந்தனையே சுற்றிவரும் அந்த எலிக்குட்டி பெண் அசைவற்று கிடப்பதே வேந்தனுக்கு பெரும் வேதனையை தந்தது.
மாமா குட்டி மாமா குட்டி என திரும்பும் இடமெல்லாம் அவள் குரல் தானே கேட்கும் அவனுக்கு.காலையில் தான் தன் காதலை அவன் காலடியில் இறக்கி வைத்தாள் இப்பொழுது அவன் கரங்களில் வாடிய கொடியாய் கிடக்கிறாள்.
பளிங்கு சிலை போல அவனுடன் கைக்கோர்த்து வந்தவள் எங்கே கை நழுவி சென்று விடுவாளோ என்று பயந்தவன் அவள் கரத்தை இறுக்கி பிடித்து கொண்டான்.
உனக்கு ஒன்னும் ஆகாது அதிமா மாமா உனக்கு ஒன்னும் ஆக விட மாட்டேன்.நீயும் என்ன
என்ன விட்டு போய்டதடி கூட இருந்த எல்லாருமே நம்பிக்கை துரோகியா போய்ட்டாங்க நீயும் என்ன விட்டு போனா எனக்குனு யாருமே இல்ல என அழுதவனை காண அந்த செக்யூரிட்டி கண்களும் கலங்கி போனது.
தங்கள் முதலாளி அழுதான் என சூடம் அடித்து சத்தியம் செய்தாலும் யாரும் நம்ப மாட்டார்கள் அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் அனைவரையும் அடிக்கியாளும் செந்தமிழ் வேந்தனை தான்.இங்கிருப்பதோ அவந்திகாவின் வேந்தனல்லவா எப்படி அழாமல் இருப்பான் அவனது வெண்ணிற சட்டையை எங்கும் அவந்திகாவின் செங்குருதி செம்மையாய் மாற்றியிருக்க உயிர் உருகும் வேதனை கண்டான் ஆண்மகன்.
சார் ஹாஸ்பிடல் வந்துட்டோம் என்ற செக்யூரிட்டி வேகமாய் சென்று ஸ்ட்ரெச்சரை எடுத்து கொண்டு வர வேந்தன் அவந்திகாவை அதில் படுக்க வைத்து உள்ளே இழுத்து கொண்டு சென்றான்.
டாக்டர்.. டாக்டர்..என ஹாஸ்பிடல் அதிர கத்தியவனின் சத்தம் கேட்டே வைத்தியர்கள் அனைவரும் ஆஜர் ஆனார்கள்.
டாக்டர் ப்ளீஸ் என் வைஃப காப்பாத்துங்க ப்ளீஸ்..கெஞ்சி கொண்டிருந்தான் வேந்தன் டாக்டர்களிடம்.
ரிலாக்ஸ் முதல்ல என்னாச்சுனு சொல்லுங்க அப்போ தான் ட்ரீட்மெண்ட் பண்ண முடியும் டாக்டர் கேட்க.
யாரோ அவள சூட் பண்ணிட்டாங்க பளீஸ் சீக்கிரமா ட்ரீட்மெண்ட் ஆரம்பிங்க.
வாட் சூட் பண்ணிட்டாங்களா போலீஸ்க்கு இன்ஃபோம் பண்ணிட்டிங்களா என்க இல்லையென தலையாட்டினான் வேந்தன்.
சார் என்ன கன் சூட்டிங்னு சொல்றிங்க போலிஸ்ல சொல்லாம எங்களால ட்ரீட்மெண்ட் பண்ண முடியாது நாள பின்ன எதாவது ப்ராப்ளம் ஆகிடும்.
டாக்டர் அதெல்லாம் ஒன்னும் ஆகாது நீங்க ட்ரீட்மெண்ட் பண்ணுங்க நா இப்போவே போலீஸ்க்கு சொல்லிடுறேன் என வேந்தன் எவ்வளவு கூறியும் டாக்டர்கள் கேட்பதாய் இல்லை பொறுமை இழந்தவன் டாக்டர் மூக்கில் ஓங்கி ஒரு குத்து விட்டான்.
நா அவ்வளவு சொல்றேன் நீ போலீஸ் போலீஸ்னு துள்ளுற நீயெல்லாம் ஒரு டாக்டரா என் பொண்டாட்டிக்கு மட்டும் எதாவது ஆச்சு உன்ன கொன்னு இங்கேயே பொதைச்சிடுவேன் என ருத்ர விழிகளால் மிரட்டியவன் உடனே தனக்கு தெரிந்த இன்ஸ்பெக்டருக்கு செக்யூரிட்டி போனில் இருந்து எடுத்து நிலமையை விலக்கி சொல்ல அந்த இன்ஸ்பெக்டரும் டாக்டரிடம் பேசினார் அதன் பின்னர் அவந்திகாவிற்கு சிகிச்சை அளிக்க ஆயத்தமானார்கள் அனைவரும்.
அடுத்த கொஞ்ச நேரத்தில் குடும்பத்தாரும் அங்கு வந்து விட வந்த உடனேயே வேந்தன் மீது பாய்ந்தான் மித்ரன்.
என் தங்கச்சி உனக்கு என்னடா பாவம் பண்ண அதுக்கு அவள இந்த அளவுக்கு சீரழிக்கிற.பாவம்டா அவ சின்ன வயசுல இருந்தே ரொம்ப கஷ்ட்ட பட்டவ..உன்ன கல்யாணம் பண்ணுதுல இருந்த ஹாஸ்பிட்டல்லயே கெடக்குறா அவள கொல்லாம நீ ஓயா மாட்டியா.. அவளுக்கு தான் உன்ன பிடிக்காதே விட்டு தொலைய வேண்டிய தானே..வேந்தன் சட்டையை பிடித்து மித்ரன் சண்டை போட பொறுமையை காற்றில் பறக்க விட்ட வேந்தனும் கத்தி விட்டான்.
நா அவள கொல்ல பாக்குறேனா வார்த்தைய பார்த்து பேசு.. அவளுக்கு என்ன புடிக்காதா... அவளுக்கு என்ன அவளோ புடிக்கும் அவ என்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறா கண் முழிச்சு வந்ததும் நீயே உன் தங்கச்சி கிட்ட கேளு அவளே சொல்லுவா என்ன எவ்ளோ லவ் பண்றானு.
இது என்ன ஹாஸ்பிடலா இல்ல மீன் மார்க்கெட்டா இப்படி கத்திட்டு இருக்கிங்க ரெண்டு பேரும் வெளியே போய் அடிச்சிக்கோங்க கோபத்தில் ராமும் கத்தி விட இருவரும் அமைதியாகி விட்டார்கள்.
இருந்தும் அவந்திகா தன்னை காதலிக்கிறாள் என வேந்தன் கூறிய செய்தி அனைவருக்கும் புதிது.சேட்டை காரியாய் சுத்தி கொண்டிருந்தவள் உள்ளே காதலும் இருந்ததா என வியக்காமல் இருக்க முடியவில்லை அவர்களால்.
வேந்தன் பக்க நியாயத்தை கேட்க கூட யாரும் தயார் இல்லாத நிலையில் இருக்க பிரபுவை கூட்டிக்கொண்டு ஜனனி வந்தாள்.
வந்தவள் அவள் பங்கிற்கு வேந்தனை போட்டு வறுத்தெடுக்க பிரபு தான் அவளை சமாதானம் செய்தார்.சார் எப்படி ஆச்சு பிரபு பொறுமையாக வேந்தனிடம் கேட்க அவன் காலையில் இருந்து நடந்த அத்தனையையும் விளக்கி சொல்ல ராம் ஆடி போய்விட்டார் இத்தனை வருட காலமும் அக்கா அண்ணனுக்கு தன் மேல் கோபம் என்று நினைத்திருந்தவர் இன்று தான் புரிந்து கொண்டார் அது கோபம் இல்லை வன்மம் என்று.
பெற்ற மகள் முன்பாகவே தாயை கொன்றிருக்கிறார்கள் அதனை வெளியே சொல்ல முடியாமல் அவள் எப்படியெல்லாம் துடித்திருப்பாள் என எண்ணும் போதே தந்தை உள்ளம் குமுறியது.
அவசர பிரிவில் அவந்திகாவிற்கு சிகிச்சை நடந்து கொண்டிருக்க உள்ளேயிருந்த வெளியே வந்தார் ஒரு டாக்டர்.அனைவரும் அவர் முக்தை பார்த்திருக்க அவரோ அந்த பொண்ணோட ஹஸ்பண்ட் எங்க என்றார்.
என்னாச்சு டாக்டர் அவ கண்ணு முழிச்சிட்டாளா நா பார்க்க போலாமா உள்ளே போக பார்த்த வேந்தனை தடுத்து நிறுத்தினார் டாக்டர்.
சார் முதல்ல இதுல ஒரு சைன் போடுங்க என்று ஒரு பேப்பரை வேந்தனிடமும் ராமிடமும் நீட்டினார் டாக்டர்.
வேந்தனும் ராமும் புரியாமல் டாக்டரை பார்க்க.சார் அவங்க ரொம்ப க்ரிட்டிக்கலான கண்டிஷன்ல இருக்காங் இதயத்துக்கு பக்கத்துல குண்டு பாய்ஞ்சிருக்க அத ரீமூவ் பண்ணாலும் அவங்க பிழைக்கிறதுக்கான வாய்ப்பு குறைவு தான் சப்போஸ் ஆப்ரேஷன்ல அவங்களுக்கு எதாவது ஆகிட்டா அதுக்கு ஹாஸ்பிடல் பொறுப்பு கிடையாது அதுக்காக தான் இந்த ஃபோர்மல சைன் கேட்குறோம் நீங்க சைன் பண்ணாம எங்களால ஆப்ரேஷனும் பண்ண முடியாது.
டாக்டர் சொல்ல சொல்ல தலையை சுற்றி கொண்டு வந்தது வேந்தனுக்கு.மனதை திடப்படுத்தி கொண்டு இருவரும் கையெழுத்து போட்டு கொடுத்தார்கள்.
சில மணி நேர போராட்டத்தின் பின்னர் டாக்டர் வெளியே வந்தார்.
சார் புல்லட்ட சக்ஸஸ் ஃபுல்லா எடுத்துட்டோம் பட் அவங்க பிழைப்பாங்களா மாட்டாங்களானு சொல்ல முடியாது இன்னும் சீரியாஸா தான் இருக்காங்க என்று விட்டு செல்ல அனைவர் முகத்திலும் சோகம்.
இன்ஸ்பெக்டர் வேந்தனை சந்திக்க வந்திருந்தார் ஹாஸ்பிடலுக்கு.மிஸ்டர் வேந்தன் உங்க மிஸஸ்ஸ சூட் பண்ணவன அரஸ்ட் பண்ணிட்டோம் அண்ட் அத யார் சொல்லி செஞ்சான்னும் கண்டு பிடிச்சாச்சு நாளைக்கு உங்கம்மாவோட கேசோட சேர்த்து உங்க வைஃப் கேசும் கோர்ட்டுக்கு வருது உங்களால.. இன்ஸ்பெக்டர் தயங்கமாய் கேட்க.
கண்டிப்பா நா வாரேன் சார் நீங்க அதுக்குணாடான ப்ரசீஜர பண்ணுங்க என்று முடித்து விட்டான் வேந்தன்.அவனுக்கும் நன்றாய் தெரியும் அவந்திகாவை சுட்டது யார் யார் சொல்லி சுட்டான் என்பதெல்லாம் ஆகவே அதை பற்றி வேந்தன் எதுவும் கேட்டு கொள்ளவில்லை.
மாமா நானும் பிரபுவும் அதிய பார்த்துக்குறோம் நீங்க கோர்ட்டுக்கு போய்ட்டு வாங்க ஜனனி சொல்ல இல்ல ஜானுமா நா காலைல போய்க்கிறேன் என்றவன் கண்ணை மூடி கதிரையில் சாய்ந்து விட ஆதரவாய் அவன் தோளை பற்றினார் ராம்.
காலையில் வேந்தன் ஏற்பாடு செய்து வைத்திருந்த வக்கீல் கோர்ட்டில் காத்து கொண்டிருந்தார் வேந்தன்,ராம் ,மித்ரன் அனைவரும் வந்திருக்க போலீசாரால் சாரதாவும் மாதவனும் அழைத்து வர பட்டார்கள்.
அவர்கள் தரப்பிலும் வக்கீல் ஏற்பாடு செய்ய பட்டிருக்க நீதிபதி வந்தவுடன் வாதம் ஆரம்பமானது.
வேந்தன் தரப்பு:-கணம் கோட்டார் அவர்களே இங்கே குற்றவாளி கூண்டில் நிற்கும் திருமதி சாரதா கோபியும் அவரது சகோதரரான மாதவனும் அவர்களது தம்பி ராமின் மனைவியை இருபது வருடங்கிளின் முன் கொலை செய்துள்ளனர்.
எதிர் தரப்பு:-அப்ஜெக்சன் மை லார்ட் அது கொலை அல்ல விபத்து என்று அந்த காலத்தில் இன்ஸ்பெக்டராக இருந்தவரால் கொடுக்கப்பட்ட ஆதாரங்கள் இதோ என ஒரு ஃபைலை வழங்கியவர் மேலும் இது எனத் கட்சி கார்கள் மீது யாரோ வீண் பழி சுமத்த தொடுக்க பட்ட போலியான வழக்கு.எதிர் தரப்பினரிடம் போதிய சாட்களும் ஆதரங்களும் இல்லாமையால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கணம் நீதி பதியை கேட்டு கொள்கிறேன்.
வேந்தன் தரப்பு:-ஏன் ஆதாரங்கள் இல்ல எங்களிடம் தகுந்த ஆதாரங்களும் அந்த கொலையை கண்ணால் பார்த்த சாட்சியும் கூட உண்டு மை லார்ட்.அத்துடன் இவர்கள் ராமின் மகள் அதாவது வேந்தனின் மனைவி அவந்திகாவையும் நேற்று கொள்ள திட்டம் தீட்டி அதை செயல் படுத்தியதற்கான ஆதாரமும் உண்டு மை லார்ட் என்ற வக்கீல் முதலில் அவந்திகா கொலை முயற்சி சம்பந்தமான ஆதாரங்களை வழங்கினார்.
சாரதா ராகவிற்கு போன் செய்து அவந்திகாவை கொள்ள பேரம் பேசிய ஆடியோ ஆதரமாக வழங்க பட பயத்தில் சாரதாவின் உடல் வியர்த்து போனது.
போலீஸார் ராகவை கூண்டில் நிறுத்திட வேந்தன் தரப்பு விக்கீலின் குறுக்கு கேள்வியில் ராகவ் தவறை ஒப்புக்கொண்டான் அத்தோடு அவன் அவந்திகாவை சூட் செய்த வீடியோ ஃபுட்டேஜும் காட்டப்பட்டு முதல் குற்றம் நிரூபிக்க பட்டது.
நீதிபதி:-இவர்கள் கொலை செயததற்கான சாட்சி இருக்கிறதா.
வேந்தன் தரப்பு:-யெஸ் யுவரானர் இவர்கள் கொலை செய்ததை கண்ணால் கண்ட சாட்சி ஒன்று அவந்திகா மற்றொன்று இவர்கள் வீட்டிலேயே ஒருவர் அவந்திகாவால் இப்போ வர முடியாத சூழ்நிலை என்பதால் அந்த மற்றொரு நபர் இங்கு சாட்சி கூற அனுமதிக்குமாறு கணம் கோர்டார் அவர்களை கேட்டு கொள்கிறேன்.
நீதிபதி:-பர்மிஷன் கிரேன்டட்.
யார் அந்த சாட்சியாய் இருக்க கூடும் என ராம் முதற்கொண்டு அனைவரும் வாசலை பார்த்திருக்க அங்கே கம்பீரமாய் வந்து நின்றார் சாரதாவின் கணவர் கோபி.
இ..இ.ந்தாளு எப்படி இங்க வந்தான்.. மாதவனும் சாரதாவும் திருதிருவென விழித்து கொண்டிருக்க கூண்டில் ஏறி நின்றார் கோபி.
எதிர் தரப்பு:-நீங்க இவங்களோட கணவர் தானே சார் நீங்களே உங்க மனைவி மேல பழி போடலாமா.
கோபி:-இவ மனைவி இல்ல சார் ராட்சசி அண்ணன் தங்கச்சி ரெண்டு பேரும் பண பேய்ங்க என் மச்சான் மனைவிய தண்ணீல அமுக்கி கொள்றத நானே பார்த்தேன் அப்போவே போலீஸ்ல கம்ப்ளைன்ட் பண்ணலாம்னு தான் சார் நா போனேன் ஆனா அதுக்குள்ள இந்த ரெண்டு பிசாசுங்களும் அந்த அவந்திகா பொண்ணையும் என் புள்ளை வேந்தனையும் கொன்றுவேன்னு என்கிட்டயே மிரட்டுனாங்க.
பசங்க உயிர காப்பாத்த உண்மைய சொல்லாம இத்தனை நாள் இவங்க கிட்ட அடிமை வாழ்க்கை வாழ்ந்தேன் ஆனா இப்போ சிங்க குட்டி மாதிரி என் மகன் எனக்கு துணையிருக்கான் இனி எதுக்கும் நா கலங்க மாட்டேன்.இவங்க ரெண்டு பேரும் தான் ராமோட மனைவிய கொன்னாங்க உறுதியாகவும் என் மகன் இருக்கிறான் என்ற கர்வத்துடனும் உரைத்தார் கோபி.
கிடைக்க பெற்ற ஆதாரங்களையும் சாட்சியங்களையும் ஆராய்ந்து பார்த்ததில் சாரதாவும் மாதவனும் தான் இந்த கொலையை செய்தார்கள் என தெளிவாக தெரிகின்றது.அத்தோடு அவந்திகா கொலை முயற்சிக்கும் சேர்த்து இந்த கோர்ட் அவர்கள் இருவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கிறது.
அவ்நிகாவை கொள்ள முயற்சி செய்த ராகவிற்கும் இந்த கோர்ட் பதினைந்து ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை வழங்குகிறது என தீர்ப்பு வழங்க நிம்மதியாய் மூச்சு விட்டார் கோபியும் ராமும்.
அன்று இரவு அவந்திகா வேந்தனை கட்டி கொண்டு உளறிய படியே அவள் தாய் மரணத்தையும் பற்றி உளறி விட திடுக்கிட்டு போன வேந்தன் நள்ளிரவில் யோசனையாய் வெளியே உலாத்தி கொண்டிருந்தான்.
நடு சாமத்தில் பேய் போல் உலாவிய மகனை கண்டு கோபி என்னவென கேட்க முதலில் தயங்கியவன் பின்னர் அவந்திகா உளறியதை கூற சுற்றும் முற்றும் பார்த்த கோபியோ அவரும் உண்மையை கூறிவிட அந்த நேரமே தாயின் மீது வெறுப்பு உண்டாகியது வேந்தனுக்கு . இதில் அவள் காலையிலேயே கால் உடைந்த நாடகம் வேறு போட்டு விட தாயின் நய வஞ்சக மனது நன்றாகவே புரிந்து போனது மகனுக்கு.
குமரனும் ராசாத்தியும் விஷயத்தை கேள்வி பட்டு கோர்ட் பக்கம் தலை வைத்து கூட படுக்கவில்லை சாரதா மீது அவர்களுக்கும் வெறுப்பு உண்டாகிட அவந்திகாவை பார்க்க ஹாஸ்பிடல் சென்று விட்டார்கள்.
மாதவனின் மனைவி கோபித்துக் கொண்டு ஜனனியோடு சென்று விட்டாள் கயவர்கள் அனைவரும் ஜெயிலுக்கு சென்று விட்டார்கள்.
கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வேந்தனுக்கு ஜனனியிடமிருந்து அழைப்பு வந்தது.
சொல்லு ஜானுமா அதி கண்ணு முழிச்சிட்டாளா எதிர்பார்ப்போடு கேட்டான் வேந்தன்.
மாமா...மாமா... நம்ப அதி என இழுத்த ஜனனி அடுத்த சொல்லிய செய்தியில் தூணை பிடித்து கொண்டு இடிந்து அமர்ந்தான் வேந்தன்.
வழக்கில் வென்றவன் வாழ்க்கையில் தோற்று விட்டானா..??
நான்கு வருடங்கள் கழித்து
தன் ஆஃபிஸ் அறையில் கண்களை மூடி அமர்ந்திருந்தான் வேந்தன்.மாமா குட்டி என்ன பிடி பார்க்கலாம் மாமா குட்டி என்ன தூக்கு..மாமா குட்டி..என்னை விட்டு போகாத என்ற குரல் காற்றில் கேட்க மெல்லமாய் சிரித்து கொண்டான் வேந்தன்.
அவளது நினைவுகளே அவனுக்கு கிடைக்கும் எனர்ஜி பூஸ்ட்.காற்றோடு காற்றாய் அவள் குரல் அவன் காதை தீண்டி கொண்டே இருக்கும் ஆஃபிஸ் அறை எங்கும் அவளது வாசம் இன்னும் நிறைந்திருப்பதாய் ஒரு உணர்வு.
அவளது நினைவுகள் பேயாய் ஆட்டுவிக்க அதற்கு மேலும் அங்கிருக்க முடியாதவன் காரை எடுத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றான்.
வாசலிலேயே வழி மறித்து பின்றது மூன்று வயது வாண்டு குட்டி ஒன்று.
என்னடா என் பாப்பு குட்டிக்கு என்னாச்சு ஏன் பாப்பு முகம் வாடியிருக்க வழி மறித்து நின்ற குழந்தையை தூக்கிக் சொல்லம் கொஞ்சினான் வேந்தன் .
பப்பாஆஆ...அந்த பேய்யி.. பாப்பு சாக்கி தூக்கித்து போச்சு...மழலை மொழியில் விம்மியது குழந்தை ஓஓ அந்த பேய் பாப்புவோட சாக்கிய தூக்கி சாப்பிட்ருச்சா ..என்ன பண்ணலாம் அந்த பேய..சாக்கி மத்தும் இல்ல..சரலக் கூத தாப்புச்சு..
எதே சரலகையும் தூக்க சாப்பிட்டாளா எங்க அவ நீங்க போய் தாத்தா கூட விளையாடுங்க நா போய் அவள என்னனு கேட்டுட்டு வாறேன் என மூன்று வயது குட்டி பெண் ஆராதனாவை இறக்கி விட்டவன் மாடி நோக்கி நடை போட்டான்.
அங்கே அவனது அறையில் ஆராதனா சொன்னது போல அவனின் அவந்திகையானவள் சாக்லேட் சரலக்கை விழுங்கி கொண்டிருக்க தலையில் அடித்து கொண்டே அறைக்குள் நுழைந்தான்.
ஏன்டி ஒரு புள்ளை பெத்தும் உன் சேட்டை குறையுதா பாப்பாவுக்கு வச்சிருக்க சரலக்கை கூட விட்டு வைக்க மாட்டிங்குற வாய் மனைவியை கடிந்து கொண்டாலும் கை அவள் இதழோரம் ஒட்டியிருந்த உணவு துகலை துடைத்து விட மறுக்கவில்லை.
இப்படி சாப்பிடறது தான் கிக்கே இருக்கு மாமா குட்டி ஆமா நீயென்ன இந்த நேரம் வீட்டுக்கு வந்திருக்க ஃபேக்றிக்கு போகலையா அவனை மேலிருந்து கீழாக ஒரு மார்க்கமாய் பார்த்து கொண்டே அவந்திகா கேட்க..
நான்கு வருடங்களின் முன்னர் கோர்ட்டில் இருந்து வெளியே வந்த வேந்தனுக்கு ஜனனியிடமிருந்து அழைப்பு வந்தது.
சொல்லு ஜானுமா அதி கண்ணு முழிச்சிட்டாளா எதிர்பார்ப்போடு கேட்டான் வேந்தன்.
மாமா...மாமா... நம்ப அதி என இழுத்த ஜனனி அடுத்த சொல்லிய செய்தியில் தூணை பிடித்து கொண்டு இடிந்து அமர்ந்தான் வேந்தன்.
வேந்தா வேந்தா.. என்னாச்சு மித்ரன் வேந்தனை பிடித்து உலுக்க அவனோ நிரமலமான முகத்துடன் ஹாஸ்பிடலுக்கு போலாம் என்று கிளம்பி சென்றான்.
அனைவரும் பதட்டத்தோடு ஹாஸ்பிடல் சென்று பார்க்க அங்கே கண்விழித்த அவந்திகாவோ யார் சொல்வதையும் கேட்காது டிக் டாக் செய்து கொண்டிருந்தாள்.
அதனை இப்பொழுது அதனை நினைத்தாலும் வேந்தனால் சிரிப்பை அடக்க முடியாது.
டேய் நான் கேட்டுட்டே இருக்கேன் நீ என்னடா யோசிச்சிட்டு இருக்க கனவுலகில் இருந்தவன் கையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள் அவந்திகா.
அதுவா பொண்டாட்டி நீ இப்போலாம் ஆஃபிஸ் வாரதே இல்லையா அங்க போய் வேலையே செய்ய முடியலடி எங்க பார்த்தாலும் உன் முகம் தான் தெரியுது எங்க திரும்பினாலும் உன் குரல் தான் கேட்குதுடி ப்ளீஸ் திரும்ப ஆஃபிஸ்க்கு வாடி செல்ல குட்டி குழைவாய் பேசி கொண்டே அவன் அருகில் வர அவன் பார்பி ஒற்றை விரலை வைத்து தடுத்து நிறுத்தினாள் அராத்து குட்டி.
ஆஃபிஸ் வந்தா நீ எங்கடா வேலைய பார்க்க விடுற வர வர உன் சில்மிஷத்துக்கு அளவே இல்லாம போய்டுச்சு சரியான கேடி பயடா நீ கணவனை மெல்லமாக கடிந்து கொண்டவள் சாக்லேட்டை பிரித்து வாயில் வைக்க அதனை ஓடி வந்து பிடுங்கி கொண்டாள் அவந்திகா வேந்தனின் ஆசை மகள் ஆராதனா.
ஙே...மாமா என பெரியவள் மூக்கை உறிஞ்ச ஐய் பப்பா சாக்கி என சின்னவள் பல்லை காட்டினாள்.
ஹேய் சாக்லேட்ட குடுடி ஆராதனா கையில் உள்ள சாக்கியை அவந்திகா பிடுங்க போக ஆரதனா அதனை தூக்கி கொண்டு ஓடிவிட அவந்திகாவோ மாமா குட்டியை பாவமாக பார்த்து வைத்தாள்.
சரிடி சக்கரை கட்டி அப்படி பார்க்காத உனக்கு நிறைய சாக்கி வாங்கி தாரேன் என அவளை அள்ளி கொண்டவன் விழிகள் வேறு கதை பேசிட வெவ்வானமாய் கன்னம் சிவந்து போனாள் செந்தமிழ் வேந்தனின் அவந்திகை.
முற்றும்...