முருகன் பக்தி பாடல் வரிகள் - சொல்லில் தமிழை வைத்து

முருகன் பக்தி பாடல் வரிகள்

முருகன் பக்தி பாடல் வரிகள் - சொல்லில் தமிழை வைத்து

சொல்லில் தமிழை வைத்து

பொருளில் உன்னை வைத்தால்

 (சொல்லில் தமிழை வைத்து

பொருளில் உன்னை வைத்தால்

நல்ல கவிதை வரும் ... முருகா

நால்வகை இன்பம் வரும்)

 (சொல்லில் ... )  

செம்மை மனம் வளர்த்து

சேவலை அங்குவைத்தால் (2)  

முன்மை பிறப்பினிலும் ...

முருகா முக்தியும்

கொடுப்பவன் நீ

 (சொல்லில் ... )  

கற்பனைச் சோலை வைத்து

கலை மயில் ஆட வைத்தால் (2)  

அற்புதம் கோடி உண்டு ...

முருகா அழியும் வினை இரண்டு

 (சொல்லில் ... )  

பார்வையில் குன்றம் வைத்து

பாசத்தில் உன்னை வைத்தால்

 ஓர் ஒளி காட்டிவைப்பாய் ... முருகா

ஓம் என கூட்டிவைப்பாய்

 (சொல்லில் ... )  

முருகா ... முருகா ... முருகா ...

முருகா ... முருகா ... முருகா.