விநாயகர் பாடல்கள்- ஒன்பது கோளும் பாடல் வரிகள்
Download Onbathu Kolum Ondrai Kana with Lyrics | ஒன்பது கோளும் ஒன்றாய் | Tamil Devotional | Vinayagar விநாயகர் பாடல்கள்
அதுவே ஆனை முகம் எனும் ஓம்கார விளக்கம்
சுழலும் கோள்கள் அவன் சொல் கேட்கும்
அவனை தொழுதால் போதும்
நல்லதே நடக்கும்
ஆனை முகனை தொழுதால்
நவகிரகங்களும் மகிழும்
நல்லதே நடக்கும்
நல்லதே நடக்கும்
ஒன்பது கோளும் ஒன்றாய் காண
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
பல வித குணங்களை கொண்டிருக்கும்
எங்கள் கற்பக கருவில் அவை வரும் போது
ஒன்றாய் சேர்ந்து பலன் அளிக்கும்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
சூரிய பகவான் ஒளி முகம் காண
பிள்ளயார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்
கதிரவன் தரிசனம் பெற வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக கருவின் நெற்றியில் மலரும்
கதிரவன் தரிசனம் பெற வேண்டும்
ஞாயிறு அங்கே குடியிருப்பான்
அவன் ஆனை முகத்தனின் அடியவர் மனதில்
ஒளியாய் வந்து குடியிருப்பான்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
திங்கள் பகவான் திரு முகம் காண
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்
குளிரும் அவனை தொழ வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக பெருமான் தொப்புள் குழியில்
குளிரும் அவனை தொழ வேண்டும்
கணபதி வயிற்றில் பிறந்திருப்பான்
எங்கள் கற்பகத்தானை கண்டவர் தமக்கு
தீரா பிணிகளை தீர்த்து வைப்பான்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
அங்காரகனவன் தங்கும் இடமே
கணபதியாரின் வலத் தொடையே
அவன் பொங்கும் முகத்தை காணுதல் வேண்டின்
வணங்கிட வேண்டும் கணபதியை
கணபதியாரின் வலத் தொடையே
அவன் பொங்கும் முகத்தை
காணுதல் வேண்டின்
வணங்கிட வேண்டும் கணபதியை
மழையாய் மாறி பொழிந்திடுவான்
அவன் பிள்ளையார் பட்டி வணங்கிடும் மாந்தர்
மனதுக்கு உறுதியை கொடுத்திடுவான்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
புத பகவானின் பத மலர் இரண்டும்
பிள்ளையார் பட்டியில் தெரிகிறதே
எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே
புதனவன் தரிசனம் கிடைக்கிறதே
பிள்ளையார் பட்டியில் தெரிகிறதே
எங்கள் வலம்புரி நாயகன் வலக்கையின் கீழே
புதனவன் தரிசனம் கிடைக்கிறதே
ஞானம் நமக்கு கைக் கூடும்
எங்கள் கற்பகத்தானின் வலக் கை காண
வாக்கு வன்மையும் கை சேரும்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
குருவின் தரிசனம் பெறுதல் வேண்டின்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்
குடி வந்த குருவை தொழ வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
நம் கற்பகப் பெருமான் உச்சந்தலையில்
குடி வந்த குருவை தொழ வேண்டும்
தடைகளை நீக்கி வளம் பெருக்கும்
நம் கணபதி சிரத்தை காண்கிற
மங்கையர்
மாங்கல்ய பலமே திடமாகும்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
சுக்கிரன் பார்வை படுதல் வேண்டின்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே
இருக்கும் அவனை தொழ வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
எங்கள் இறைவன் கணபதி இடக் கையின் கீழே
இருக்கும் அவனை தொழ வேண்டும்
சுக்கிரன் அங்கே குடியிருப்பான்
அவன் கற்பகக் கடவுளை கண்டவர் தமக்கு
பொன் பொருள் அள்ளி கொடுத்திடுவான்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே
வாழும் அவனை தொழ வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
எங்கள் வலம்புரி நாதன் வலக் கை மேலே
வாழும் அவனை தொழ வேண்டும்
சனி பகவானின் செயலல்லவா
அந்த கணபதி கரத்தை கண்டவர் தமக்கு
சனியின் பார்வை நலமல்லவா
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்
திருநாகேஸ்வரம் அறியா மாந்தர்
பிள்ளையார் பட்டி வரலாமே
எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே
இருக்கும் ராகுவை தொழலாமே
பிள்ளையார் பட்டி வரலாமே
எங்கள் கற்பக பகவான் இடக் கை மேலே
இருக்கும் ராகுவை தொழலாமே
மருத்துவம் செய்வான் தெரியாதா
ராகுவின் பதத்தை கணபதி கை மேல்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
கேதுவின் தோஷம் போகுதல் வேண்டின்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக தேவனின் இடத் தொடை
மேலே
மலரும் கேதுவை தொழ வேண்டும்
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பக தேவனின் இடத் தொடை மேலே
மலரும் கேதுவை தொழ வேண்டும்
கணபதி தொடையில் கொலுவிருப்பான் அவன் தொடரும்
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
நவகிரக நாயகன் கணபதியே
அவன் திருவடி பணிந்தால் துயர் இல்லையே
பிள்ளையார் பட்டி வர வேண்டும்
அங்கு கற்பகம் என்னும் கடவுளின் மெய்யில்
உறையும் அவரை தொழ வேண்டும்