சுஜாதாவின் மலை மாளிகை நாவல்

எழுத்தாளர் சுஜாதாவின் படைப்பில் உருவான மலை மாளிகை திகில் நாவல்

சுஜாதாவின் மலை மாளிகை நாவல்
Google image
  1. மலை மாளிகை

மதுரையை போயிங் தொட்டபோது கணேஷ்

"அரைமணிதான் லேட்" என்றான்.

கைக்கடிகாரத்தைப் பார்த்து

போன தடவை டில்லியிலேந்து வர்றப்ப அரை அரை மணியா தவணை முறையில அறிவிப்பு செய்து பின்னால கிளம்பினாங்க" என்றான் வசந்த்

படிக்கட்டு அமைத்ததும் இறங்கிப் பெட்டிகளைச் சேகரிக்க, விமான நிலையத்தருகில் குதிரை லாயம் போல் இருந்த ஆஸ்பெஸ்டாஸ் கொட்டடிக்கு வந்தார்கள். "யாராவது வரவேற்க வந்திருக்காங்களா பாரு. வசந்த்"

வசந்த் சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு வெளியே வந்தான். மூன்று டாக்ஸிகளும் ஒரு பாண்டியனும் காத்திருந்தன. டப்பா கட்டிய டாக்ஸிக்காரர், "எங்கிட்டுப் போவணுங்க? மதுரை போயிருவமா" என்றார்

கொடைக்கானல் செல்வரங்கம் அனுப்பிச்சாரா உங்களை?" என்று வசந்த் கேட்க

"இல்லீங்க, நான் உள்ளூரு. கொடைக்கானல்லேருந்து யாரும் வரலை. நாம போயிருவம் வாங்க... முந்நூறு ரூவாதேன்!"

பாஸ். யாரும் வரலை" என்று கணேஷின் அருகில் சென்றான் வசந்த்

கண்ணைத் திறந்து பாரு"-கணேஷ் காட்டினான். எதிரே ஒருவர் மார்பு முழுவதும் மறைக்கும்படியாக 'Ganesh Vasanth Fit No.50 என்று அட்டையில் அவசரமாக எழுதியதைப் பிடித்துக் கொண்டு நின்றார். அருகே ஆரஞ்சு நாய்க்குட்டிபோல் ஒரு வண்டியில் Paradise Im என்று எழுதியிருந்தது

"அட, இதைப் பார்க்காம விட்டேனா!"

பொம்பளை இல்லை பாரு

இருவரும் அருகே செல்ல, "அட்டைக்காரரே! நாங்கதான் கணேஷ்-வசந்த்!

அந்த ஆள் கணேஷிடத்தில் ஒரு கடிதத்தைக் கொடுத்தார்

அன்புள்ள கணேஷ்



மலை மாளிகை

விமான நிலையத்துக்கு சந்திக்கலாம் வர இயலாததற்கு மன்னிக்கவும் மலை மாளிகையில்

நான் கேட்டது இரண்டும் கொண்ட வந்தீரா

அந்த வேனில் ஏறி உட்கார்ந்து அது கிளம்பியபோது "இந்த வண்டி செல்வரங்கம் அனுப்பிச்சாரா?" என்றான் கணேஷ், "இல்லீங்க இது ஓட்டல்ல அனுப்பிச்சாங்க அங்கேதான் ரூம் போட்டிருக்கு உங்களுக்கு

செல்வரங்கம் வீடு உங்களுக்குத் தெரியுமா

மலை மாளிகைன்னு தெரியும். ஆனா, உள்ளே போனதில்லை."

வேன் கிளம்ப "நேரா போயிடலாங்களா, இல்லை நடுவில் முனியாண்டி விலாஸ்ல நிப்பாட்டி டீ சாப்பிடுவமா?"

டீயா! யோவ், பசி குலையைப் பிடுங்குது! சாப்பாடு எங்க சாப்பிடலாம் சொல்லு இல்லை. உன்னையே விழுங்கி விடுவேன்."

"வத்தலக்குண்டுல சாப்பாடு சுமாரா இருக்குங்க!"

ஏறத்தாழ ஒரு கிலோ மீட்டருக்கு அவர்களுடன் தொடர்ந்த பாத்திமா கல்லூரி வளாகச் சுவர், ஏசுபிரானை பேசியது. சமயநல்லூர் ஸ்டேஷன் தாண்டியதும் மதுரையைத் தவிர்த்து நெடுஞ்சாலையில் சற்று நேரம் மௌனமாகச் சென்றார்கள் வத்தலக்குண்டு எத்தனை தூரம்

இந்தா வந்திருங்க

"ராஜமையர் ஊர்" என்றான் கணேஷ், வசந்த் அவனைப் புருவத்தால் வினவ கமலாம்பாள் சரித்திரம்... ராஜமையர்" என்றான்

பாஸ் வர வர உங்களுக்கு எந்த சந்தர்பத்தில் என்ன பேசறதுனு தெரியறதில்லை

அதுவும் பசி வேளை! டிரைவர், கொஞ்சம் நிறுத்துங்க பலாச்சுளை வாங்கிருவோம்

நெடுஞ்சாலையை விட்டு விலகி இப்போது வேன் மலைப்பாதையை நோக்கி விரைந்தது, "பாஸ்! நமக்கு செல்வரங்கத்தை எப்படித் தெரியும்

"ஒருமுறை எஸ்டேட் டியூட்டி கேஸ் ஒண்ணு செய்தமே ஞாபகமில்லை?"

"ஆ! அச்சாச்சா! பதினைஞ்சு லட்சத்துக்கு ரிலீஃப் வாங்கிக் கொடுத்தோம்..ஆமா, இது என்ன ரெண்டு விஷயம் கேட்டிருக்கார்?" என்று டிரைவர் கொடுத்த கடிதத்தைக் காட்டிக் கேட்டான்

ஒரு புத்தகம். ஒரு டாக்டர்... அதுவும் ஈ, என்.டி. டாக்டர் கேட்டிருந்தாரு!"

"வயசான காலத்தில் காது டமாரமா

டாக்டர் ராமமூர்த்தி வர்றதாத்தான் இருந்தார். கடைசி நிமிஷத்தில் அமெரிக்க போயிட்டார். புத்தகம் கிடைச்சது..."

எதுக்குப் போறோம்



மலை மாளிகை

வசந்த்! எனக்கு ஒரு வாரம் ரெஸ்ட் தேவைப்படுது, அந்த மலை மாளிகையைப் பார்த்தா பிரமிச்சு போயிடுவ

செல்வரங்கத்துக்கு டாட்டர் யாராவது உண்டா அல்லது அலை அலையா தலை வாரிக்கிட்டு ஒரு இளம் மனைவி?"

ஸாரி! தனி ஆள்

நாசமாப் போச்சு... ஒரு வாரம் புல்லு, பூண்டு, மலை, மரம், மட்டையா

பலாப்பழம்.. தேன், யூக்கலிப்டஸ், கோல்ஃப்!"

எல்லாம் சரிதான் பாஸ்.. ஒரு பெண் இல்லேன்னா எப்படி வண்டி ஓடும்?"

உண்ணாமல் இருக்கலாம். வேறு எதுவும்

பண்ணாமல் இருக்கலாம்.. ஆனால், ஒரு

பெண்ணோடு சல்லாபம்

ஷட் அப்

வசந்த் அந்தப் புத்தகத்தின் தலைப்பைப் பார்த்தான் 'Blood Cekks Rheology and Aging சரிதான். மாமா கடுமையான ஸ்காலர் போல! என்ன வயசு இருக்கும்

நிச்சயம் எழுபதாவது இருக்கும்

டிரைவர், கொஞ்சம் நிறுத்துங்க

"என்னடா?"

பாருங்க பாஸ், ஜிப்ஸி மேல ஒரு ஸோன்பப்டி!"

அந்தப் பெண். மாருதி ஜீப்பின் முன்பகுதியில் உட்கார்ந்தபடி கையை ஊன்றிக் கொண்டு காலாட்டிக் கொண்டிருந்தாள். வசந்த் குதித்து இறங்கி. "ஹாய்! எதாவது பிரச்சனையா?"

அந்தப் பெண் அவனை நிமிர்ந்து கண் கொட்டாமல் பார்த்தாள். அவள் புன்னகையில் கேலி இருந்தது முடிக்கற்றைகளை வெட்டிச் சேகரித்துப் பின்பக்கம் அனுப்பியிருந்தாள். திருத்தப்பட்ட புருவம் வில்லாக இருக்க, உதட்டில் கரு ரத்த சாயம். முகத்தில் ஈர மேக்கப். நகையில்லாத கழுத்து கையில்லாத சட்டை, கற்சலவை ஜீன்ஸ்

என் பேரு வசந்த் உங்களை நான் ஒரு டான்ஸ்ல பார்த்திருக்கேன்

வசந்த், வாடா! வந்துரு

ஏதாவது உதவித் தேவையா! லிஃப்ட் வேணுமா...பசிக்கிறதா? பலாச்சுளை தட்டுமா தேன் தடவலாமா சோடா வேணுமா வெச்சுக்குவமா? தாகமா என்ன. சொல்லுங்க காலார நடக்கணுமா? கவிதை

முழுமையாக படிக்க----->>>>மலை மாளிகை | சுஜாதா | நாவல்