முன் பனியா முதல் மழையா | Nandha song | Suriya | Laila | S.P.B. | Yuvan

1.Mun Paniya Nandha Suriya | Laila S.P.B., Suba Yuvan Shankar Raja Palani Barathi

முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே

ஹோ புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீ தானே

ஆண் : முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே

ஹோ

பெண் : மனசில் எதையோ

மறைக்கும் கிளியே

மனசைத் திறந்து

சொல்லடி வெளியே

கரையைக் கடந்து நீ வந்தது எதற்கு

கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு

மனசைத் திறந்து சொல்லடி வெளியே

ஆண் : என் இதயத்தை என் இதயத்தை

வழியில் எங்கேயோ மறந்து தொலைத்துவிட்டேன்

உன் விழியினில் உன் விழியினில்

அதனை இப்போது கண்டு பிடித்து விட்டேன்

இதுவரை எனக்கில்லை முகவரிகள்

அதை நான் கண்டேன் உன் புன்னகையில்

வாழ்கிறேன் நான் உன் மூச்சிலே

ஆண் : முன் பனியா முதல் மழையா

என் மனதில் ஏதோ விழுகிறதே விழுகிறதே

உயிர் நனைகிறதே யே……

பெண் : சலங்கை குலுங்க ஓடும் அலையே

சங்கதி என்ன சொல்லடி வெளியே

கரையில் வந்து நீ துள்ளுவது எதுக்கு

நிலவ பிடிச்சுக்க நெனப்பது எதுக்கு

ஏலோ ஏலோ ஏலே ஏலோ

ஆண் : என் பாதைகள் என் பாதைகள்

உனது வழிபார்த்து வந்து முடியுதடி

என் இரவுகள் என் இரவுகள்

உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி

ஆண் : இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே