இந்துக்கள் மஞ்சள் நிறத்தை ஏன் மங்கல நிறமாக வைத்தார்கள்?
மஞ்சளும் இந்துமத கலாச்சாராமும் பிரிக்கமுடியாதவை

நிறங்களில் தனித்துவம் மிக்கது
மஞ்சள் நிறம்...
இந்துக்களின் ஆலய ஆடை முதல் தாம்பூல தட்டுவரை மஞ்சளை பார்க்க முடியும், மஞ்சளை தொட்டுவைத்துதான் சுபகாரியங்களை தொடங்குவார்கள்
மஞ்சள், மஞ்சள் நிற எலுமிச்சை, அரைத்து வந்த மஞ்சள் சாந்து இவையன்றி இந்துக்கள் வழிபாடே இருக்காது
ஒரு நல்ல இந்து எப்படியாவது மஞ்சள் நிறத்தை அனுதினமும் சிலமுறையாவது பார்க்க வேண்டும் அல்லது அந்நிறம் கொண்டதை கையில் வைத்திருக்க வேண்டும் என்பது அவனுக்கு அம்மதம் செய்திருக்கும் ஏற்பாடு
அதற்கு காரணம் இந்துக்களுக்கு பெரும்பாலும் தெரியாது, அது குருவுக்கு உகந்தது, குரு பார்வை கிட்டும் இன்னும் பல விஷயங்களை சொல்லிவிட்டு செல்வார்கள்
உண்மையில் அதிலும் ஏகபட்ட விஞ்ஞான தத்துவம் இருக்கின்றது
ஆம் நிறங்களில் அதிகம் ஈர்ப்புதன்மை உடையது அதுதான் என்கின்றது ஆய்வு
மற்ற நிறங்களை விட அது பார்ப்போரை அதிகம் ஈர்க்குமாம், தனிகவனம் பெறுமாம்
எத்தனை வகையான பூச்சூடி ஒரு பெண் வந்தாலும் ஒற்றை மஞ்சள் ரோஜா சூடி ஒரு பெண் தனி கவனம் பெறுவாள்
மஞ்சள் ஆடைக்கும் அதே ஈர்ப்பு
இந்த மஞ்சள் வர்ண தத்துவத்தில்தான் உலகெல்லாம் பள்ளி வாகனங்கள் மஞ்சள் வண்ணமாகவே அறிவிக்கபட்டிருக்கின்றன
ஆம் மற்ற நிறங்களைவிட அந்த நிறம் தனி கவனம் பெறும் என்பதால் மற்ற வாகனங்கள் எளிதில் கண்டுகொள்ளும் என்பதால் இந்த ஏற்பாடு
இன்று விஞ்ஞானம் ஒப்புகொண்ட இந்த தத்துவத்தை அன்றே இந்துக்களுக்கு சொல்லிகொடுத்தது யார்?
மஞ்சள் எல்லா இடங்களிலும் இருந்தாக வேண்டும் என அவர்களுக்கு சொன்னது யார்?
ஆலய யாத்திரை செல்லும்பொழுது மஞ்சள் ஆடை உடுத்தி சென்றால் தூரத்தில் வரும்பொழுதே கவனம்பெற்று மற்றவர்கள் வணங்கி வழிவிடுவார்கள் என சொல்லிகொடுத்தது யார்?
மனிதனுக்கு தனி உற்சாகம் கொடுக்க கூடியது மஞ்சள் நிறம், உளவியல் ரீதியாக அது பெரும் சந்தோஷம் கொடுக்குமாம்
இந்துக்களின் உடையிலும் ஆலயத்திலும் ஏன் உணவிலும் கூட மஞ்சள் தவிர்க்க முடியாதது
மஞ்சள் மனிதனுக்கு மகத்துவத்தையும் தனி உற்சாகத்தையும் கொடுக்கும் , தனி ஈர்ப்பினை ஏற்படுத்தும் என்பதால்தான் இந்துக்கள் குருபகவான் அவன் அருள் என என்னவெல்லாமோ சொல்லி வைத்தார்கள்
இந்துக்கள் மஞ்சள் நிறத்தினை பெருமை படுத்தியதில் அர்த்தம் உண்டு என இன்றைய உலகம் ஏற்றுகொள்கின்றது
மஞ்சள் இங்கு அப்படி கொண்டாடபட்டது, ஒரு காலத்தில் மங்கலம் மற்றும் நல்லுறவின் அடையாளமாக மஞ்சள் நிறத்தில்தான் ஜவுளி மற்றும் மளிகை கடை அன்பளிப்புகள் கூட இருந்தன
இங்கு அந்நிறம் அப்படி கொண்டாடபட்டது
ஆனால் நாகரீகம் என்ற போக்கில் இங்கு அது மாறிவிட்டது, மஞ்சள் என்றால் பட்டிக்காடு என்றும் ராமராஜன் பாணி எனவும் கிண்டல் செய்யும் அளவு ஆகிவிட்டது
ஆனால் மேற்கு நாடுகளோ மஞ்சள் நிறத்தின் மகிமையினையும் உணர்ந்து மாறிகொண்டிருக்கின்றன
மஞ்சளை நாமும் போற்றுவோம், இந்துக்கள் சொன்ன தத்துவம் சாதாரணம் அல்ல, மஞ்சள் தனிபெரும் பலன்களை கொடுக்க கூடியது
இன்று விஞ்ஞானம் கண்ட அந்த ரகசியத்தை அன்றே சொன்ன இந்துக்கள் எப்படிபட்ட அறிவார்ந்த சமூகமாக இருந்திருக்க வேண்டும்?
மஞ்சளின் மகிமை தெரிந்ததாலோ என்னவோ மிகபெரும் அறிவாளியும் கடும் முன்னெச்செரிக்கை கொண்டவருமான கலைஞர் கருணாநிதி மஞ்சள் துண்டுக்கு மாறினார்
பார்க்கவே அருவெறுப்பானதும் அமங்கலத்தின் அடையாளமானதும் இந்திய பருவகாலத்திற்கும் ஒத்துவராததும் , பார்த்ததும் வெறுப்பினை கொடுக்கும் வண்ணத்தில் இருந்து அவர் மஞ்சளுக்கு மாறினார்
ஆனால் மஞ்சளுக்கு அவர் மாறியபின் அவருக்கான பெரும் விபரீத ராஜயோகம் தொடங்கிற்று
சன்டிவி வந்தது, மத்திய அமைச்சரவையில் 15 ஆண்டுகாலம் இடம்பிடித்தார், ஜெயாவுக்கு நெருக்கடி கொடுத்தார் , சிறையிலும் தள்ளினார் இன்னும் ஏராளம்
ஆம் மஞ்சள் துண்டுக்கு மாறியபின் அவருக்கு வளர்ச்சியே தவிர சரிவு இல்லை, நிச்சயம் இல்லை
என்ன ஜாதகம் அவருடையது? ஒரு மனிதன் அதுவும் நாத்திக மனிதன் ஆத்திகத்துக்குமா எடுத்துகாட்டாக இருப்பான்?
அவர் இருந்திருக்கின்றார், விசித்திரமான மனிதர் அவர்
அவர் இருக்கட்டும்
மஞ்சள் சாந்து, அரைத்த மஞ்சள், எலுமிச்சை, மஞ்சள் நீர் விளையாட்டு, ஆலயங்களுக்கான மஞ்சள் ஆடை என இந்துக்களின் பெரும் அடையாளமான மஞ்சள் நிறத்தில் ஏகபட்ட விஞ்ஞான ரகசியம் உள்ளது
உணவுக்காக சேர்க்கபடும் மஞ்சள் பெரும் நோய்களை தவிர்க்கின்றது என்பது மருத்துவம் அதையும் இந்துக்கள் செய்தார்கள்
பார்த்தாலே தனி கவனம் கொடுக்கும் என மஞ்சள் நிறத்தை சொல்லி பள்ளிவாகனம் வரை வைத்திருக்கின்றார்கள் மேல்நாட்டவர்
இதை இந்துக்கள் என்றோ சொல்லிவிட்டார்கள்
காலசக்கரத்தில் எதெல்லாம் இந்துக்களின் மூடபழக்கம் என சொன்னார்களோ அதெல்லாம் மாபெரும் விஞ்ஞான தத்துவமாக ஏற்றுகொள்ளபட்டே வருகின்றது.